search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னையில் விசாரணை"

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு சென்னையில் 24-ந் தேதி விசாரணை நடத்துகிறது. #ThoothukudiSterlite #SterliteCase
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

    இந்தக்குழு சென்னை சேப்பாக்கம் எழிலகம் கலசமகாலில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு விசாரணை நடத்துகிறது. இந்த அறிவிப்பை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தொடர்பாகவோ அல்லது ஆதரவு தொடர்பாகவோ மனு அளிக்க விரும்புபவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ThoothukudiSterlite #SterliteCase
    ×